அரசுஊழியராக அறிவிக்ககோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

Loading

திருவண்ணாமலை ஜன31.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட அமைப்பாளர் சுமதி,தஹஜிம்பானு,திலகவதி,
சுதா,இந்திரா உள்பட 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசுஊழியராக்க வேண்டும்.அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.ஓய்வுபெறும்போது ஊழியர்களுக்கு ரூ.10 லஞ்சமும்,உதவியாளருக்கு ரூ.5 லஞ்சமும் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட திட்ட அதிகாரியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *