திருவள்ளூரில் 11-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் :
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, 11-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமை தாங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக விளையாட்டு மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா மினி மாரத்தான் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்து, பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து 18 வயது நிரம்பியவர்களது புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கி, ஓவியப்போட்டி, மினி மாரத்தான் போட்டி ஆகிய போட்டிகளில வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும், அரசு மற்றும் தனியார் வாகனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசுரங்கள் மற்றும் ஒட்டு வில்லைக்ள ஒட்டப்படடது.
பின்னர் மாவட்டத்தின் அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ளாட்சி அமைப்புகள், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் உட்பட அனைவர் சார்பாக, வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் 200-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) புனிதா,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலகுரு, திருவள்ளுர் வருவாய் கோட்டாட்சியர் பீரித்தி பார்கவி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செ.அருணா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.