தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ் அவர்கள் தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வாக்காளர் உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில்
ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ் அவர்கள் தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வாக்காளர் உறுதி
மொழியினை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் இணை ஆணையாளர் (கல்வி) திரு.சங்காலால் குமாவத் அவர்கள்,
துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) திரு.ஜெ.மேகநாத ரெட்டி அவர்கள், உதவி ஆணையாளர் (பொ.நி.ம.ப)
திருமதி டி.ஜெயசீலா அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) திருமதி ஃபர்மி வித்யா அவர்கள், மாநகராட்சி பணியாளர்கள்,
அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.