நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் என்று கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்தார்.

Loading

நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் என்று கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்தார்.

ஆனால் இடையே ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து கட்சி தொடங்கும் முடிவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். உடல்நிலை காரணமாக தான் எடுத்த இந்த முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிய ரஜினிகாந்த், இதற்காக மக்களிடம் மன்னிப்பும் கேட்டார்.

ரஜினியின் அரசியல் வருகைக்காக பல ஆண்டுகளாக காத்துக் கிடந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

இந்நிலையில் ரஜினிகாந்தை அரசியலுக்கு வர வலியுறுத்தி, சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே ரசிகர்கள் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 10 ஆயிரத்திற்கு அதிகமானோர் பங்கேற்று, “தலைவா தமிழகம் காக்க வா!”, எங்களை வாழ வைத்த தமிழகத்தை வாழவைக்கவா..! தலைவா வா” என்று முழக்கங்களை எழுப்பினார்கள் இதில் வட சென்னை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சோம கந்தசேகர் மற்றும் ரஜினி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *