மனிதாபிமானத்தில் உச்சம் தொட்ட தூத்துக்குடி மாவட்ட “நடிகர் கார்த்தி மக்கள் மன்றம்”

Loading

தூத்துக்குடி மாவட்டம் “முத்துநகர் பார்வையற்றோர் சமுதாய அறக்கட்டளை”யின் செயலாளர் திரு.முருகேசன் அவர்களின் ஏற்பாட்டில் தூத்துக்குடி நடிகர் கார்த்தி மக்கள் மன்றத்தின் தலைவர் திரு.M.K.வெங்கடேஷ் கஸ்பார் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் பார்வையற்ற 100 நபர்களுக்கு மதிய உணவும், பார்வையற்ற 100 குடும்பங்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளும் வழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.இவ்விழாவில் வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் மற்றும்
M K.பாரத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .மேலும் இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நடிகர் கார்த்தி மக்கள் மன்றத்தின்
மாவட்ட துணைத் தலைவர் R.ஜூடு, மாவட்ட பொருளாளர் B.அஜய், துணைப் பொருளாளர் S.ஜெயராம்,மாவட்ட அமைப்பாளர் S.பிரபாகரன் மற்றும் நடிகர் கார்த்தியின் ரசிகர்களான அருண், விக்கி, பாலா, சுந்தர் செல்வம் ஆகியோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தூத்துக்குடி நடிகர் கார்த்தி மக்கள் மன்றத்தின் தலைவர் திரு.M.K.வெங்கடேஷ் கஸ்பார் இதுவரைக்கும் பல உதவிகளை செய்து வந்தாலும் பார்வையற்ற மக்களுக்கு உதவி செய்தது மனிதாபிமானத்தின் உச்சம் என்பதை காட்டுகிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *