பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை : கலெக்டர் தகவல் :

Loading

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி,ஐஐம், ஐஐஐடி,என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை ஆண்டிற்கு ரூ.2 லட்சம் வரை முதற்கட்டமாக 100 பேருக்கு வழங்க தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ,மாணவிகளாக இருத்தல் வேண்டும்,குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பதினை பரிந்துரை செய்து இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி எண்.044-28551462, மின்னஞ்சல் முகவரி: tngovtiitscholarship@gmail.com என்ற முகவரிக்கு 15.02.2021-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்

மேலும், விவரங்களுக்கு தாங்கள் பயிலும் கல்லூரியையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அல்லது 044-27661888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் பா.பொன்னையா தெரிவிக்கலாம்.
=========================================================================

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *