மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான நேர்முக தேர்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான நேர்முக தேர்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
2020-2021 நிதி ஆண்டிற்கு இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு இரண்டு கைகளும் நல்ல நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான நேர்முக தேர்வில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
மேலும் தேர்வு செய்யப்படவுள்ள நபர்களுக்கு விரைவில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 4 மாற்றுத்திறனாளிகள் ரூ.4 இலட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்ககூடிய சக்கர நாற்காலி மற்றும் மருத்துவ பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இ.பொம்மி மற்றும் அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.
வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், அரியலூர்.