மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்காக மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் செயல்படும் ஜவ்வாது மலை பழங்குடியின உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்.

Loading

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம், கோவிலூர் ஊராட்சி, ஜமுனாமரத்தூரில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக ஜவ்வாது மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்காக மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் 2019-2020 ஆம் ஆண்டு ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் செயல்பட்டு வரும் சாமை அரிசி, தேன், மிளகு, புளி ஆகிய பொருட்கள் உற்பத்தி செய்து சந்தை படுத்தும் ஜவ்வாது மலை பழங்குடியின உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப. அவர்கள் செய்தியாளர்களுடன் நேரில் சென்று சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. பா. ஜெயசுதா, ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத் தலைவர் திருமதி. ஜீவா மூர்த்தி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *