ஒட்டன்சத்திரத்தில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர் விழா நடைபெற்றது.

Loading

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தனியார் மண்டபத்தில் ரோட்டரி சங்கம் மற்றும் எவரஸ்ட் அனைத்து ஓட்டுநர்கள் வாழ்வுரிமை சங்கம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதரன் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கு சாலையில் பாதுகாப்போடு வாகனத்தை இயக்குவது பற்றியும் மற்றும்ஓட்டுநர்கள் வாழ்வுரிமை காக்கும் விதமாக காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றியும் மற்றும் உயிர் பாதுகாப்பு,போன்ற அனைத்து விழிப்புணர்வுகளை பற்றி ஓட்டுனர்கள் மத்தியில் சிறப்பாக பேசினார்.
மேலும்

எவரஸ்ட் அனைத்து ஓட்டுநர்கள் வாழ்வுரிமை சங்கத்தின் நிறுவனர் அகில இந்திய தலைவர் K. சிவகுமார், மாநில பொதுச்செயலாளர் R. சண்முகம், மாநில ஒருங்கிணைப்பாளர் M.சாதிக்உசேன், மாநில துணைத் தலைவர் M.பாலசுப்பிரமணியன் , மாநிலத் துணைச் செயலாளர் , I. சிராஜுதீன் மாநில தலைமை பேச்சாளர், S.M.நிஜாமுதீன் , மாநில ஆலோசகர் அன்புடன் V.சார்லஸ், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், மற்றும் 300 மேல் உறுப்பினர்கள்
பெருந்திரளானோர் கலந்து கொண்டு அனைத்துவாகன ஓட்டுனர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி சிறப்பித்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *