திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையத்தின் குரூப்-1 தேர்வு : மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு :

Loading

திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 முதன்மைத் தேர்வு 13 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 5132 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத விண்ணப்பபித்து. தேர்வு மையங்களில் 2457 நபர்கள் தேர்வு எழுத வருகை புரிந்துள்ளனர். 2675 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை.

இத்தேர்வுக்காக 04 நடமாடும் குழுக்களும், 1 பறக்கும்படை அலுவலரும், 15 கண்காணிப்பு அலுவலர்களும் 15 முதன்மை கண்காணிப்பாளர்களும்;, 16 வீடியோ கிராபர்களும், பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்வு மையங்கள் அனைத்திலும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, காவல்துறை பாதுகாப்புடன் எவ்வித இடையூறுமின்றி தேர்வு நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன.

திருவள்ளுர் மாவட்டம் அரண்வாயல் பிரதியுஷா பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையத்தால் நடத்தப்படும் தொகுதி-1 (குரூப்-1) தேர்வினை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில் திருவள்ளுர் வட்டாட்சியர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *