தோராய பட்டாவுக்குப்பதில் தூய பட்டா வழங்கப்படும்  தமிழ்நாடு முதலமைச்சருக்கு  ஃபெயிரா  பாராட்டு.

Loading

தோராய  பட்டாவுக்குப்பதில் தூய பட்டா வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஃபெயிரா பாராட்டு. .   சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் தோராய பட்டா வைத்திருப்பவர்களுக்கு தூய பட்டா வழங்கப்படுமென சிறப்புமிகு அறிவிப்பினை    வரவேற்று  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி பாராட்டி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்.   மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்   தமிழகம் முழுவதும் உள்ள நத்தம் நிலம் சம்பந்தமாக, பொதுமக்கள் மத்தியில் நீண்ட காலமாக நீடித்து வந்த பிரச்சனைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு வருவாய்த் துறையின் சார்பில் சரியான முடிவு எடுத்து தகுந்த தீர்வினை ஏற்படுத்திடும் வகையில், நத்தம் நிலவரித் திட்ட தோராய பட்டா வைத்திருப்பவர்களுக்கு விரைவில் இ-பட்டா வழங்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் மாண்புமிகு கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் சட்டப்பேரவையில் சிறப்புமிகு அறிவிப்பினை            வெளியிட்டுள்ளார்கள்.   இத்தருணத்தில் தூய பட்டா மற்றும் தோராய பட்டா குறித்த தெளிவான விவரங்கள் மற்றும் அரசால் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள் குறித்தும் பதிவிடுவது சிறப்பானதாக இருக்கும். தூய பட்டா என்பது துல்லியமான தகவல்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் பட்டாவாகும். ஆனால் தோராய பட்டா என்பது துல்லியமான தகவல்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் பட்டா அல்ல. பெயருக்கேற்ப ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது ஏக்கர் கணக்கிலோ அளவீடு செய்து நத்தம் புறம்போக்கு நிலங்களாக அரசாங்கத்தால் வகைப்படுத்தப்பட்டிருக்கும். இவ்வகையான நத்தம் நிலங்களில் அனுபவ முறையில் அங்கு வசித்து வரும் மக்களுக்கும் மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கும் நிலத்தினை அளவீடு செய்து அரசாங்கத்தால் வழங்கப்படுவதைதான் தோராய பட்டா என்று குறிப்பிடுகிறோம்.   மேலும் மேற்கூறிய வகையில் வகைப்பாடு செய்யப்பட்டிருக்கும் நத்தம் புறம்போக்கு நிலங்களில் ஏரி, குளம், வீடு, தெரு, என வகைப்படுத்தி அதற்கான வரைபடம் மற்றும் புதிய சர்வே எண்களை கொடுத்து நிலவரித் திட்ட பட்டாவாக அளிக்கப்படுவதாகும். இதன் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்தி அந்த நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு அரசு பட்டா வழங்கப்படுவதின் மூலம் அந்த நிலங்கள் நிலவரி விதிப்புக்குள் கொண்டுவரப்படுகிறது. இந்நடைமுறையானது பிரிட்டிஷ் ஆட்சி காலம் தொட்டே இருந்து வருகிறது.

Read more