கோவை ஷாப்பிங் திருவிழா24ந் தேதி துவங்க உள்ளது
![]()
கோவை
கோவையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா 2025 டிசம்பர் 24 ந்தேதி துவங்க பட உள்ளது..
கொடிசியா வளாகத்தில் நான்கு ஹால்களில் நடைபெற உள்ள இதில் 500 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைவதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தகவல்
கோவையில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் கொடிசியா சார்பாக கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் 11 வது பதிப்பாக இந்த ஆண்டிற்கான ஷாப்பிங் திருவிழா வரும் டிசம்பர் 24 முதல் ஜனவரி 1ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கொடிசியா தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது..
இதில் கொடிசியா தலைவர் கார்த்திகேயன் ஷாப்பிங் திருவிழாவின் தலைவர் நந்தகோபால், ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
கோவை கொடிசியா வளாகத்தில் டிசம்பர் 24 தேதி முதல் ஜனவரி 1ம் தேதி நடைபெற உள்ள கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழாவில், வீட்டு உபயோக சாதனங்கள், பர்னிச்சர்ஸ், சமையலறை பொருட்கள் உள்ளிட்ட ஏரளமான பொருட்களை மக்கள் ஷாப்பிங் செய்வதோடு ஏராளமான பொழுது போக்கு நிகழ்ச்சிகளையும் தினமும் கண்டு மகிழும் வகையில் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர்..
கொடிசியா வளாகத்தில் உள்ள ஏ.பி.சி.இ.என நான்கு ஹால்களில் நடைபெற உள்ள இதில்,350 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் 500 அரங்குகள் அமைக்க உள்ளதாக தெரிவித்தனர்..
இதில், வீட்டு உபயோக சாதனங்கள், சமையலறை பொருட்கள், பர்னிச்சர்ஸ், தங்கம் மற்றும் வைர நகைகள், ஜவுளி வகைகள், உடற்பயிற்சி சாதனங்கள், பரிசு பொருட்கள், சூரிய ஒளி சாதனங்கள், காலணிகள், பாரம்பரிய ஓவியங்கள், கைவினைப் பொருட்கள், ஆட்டோ மொபைல் உதிர் பாகங்கள், சுற்றுலா செல்வதற்கான தகவல் அரங்குகள், நிதி நிறுவனங்கள் என நுகர்வோர்களின் அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக இந்த கண்காட்சி அமைய உள்ளது.
குடும்பத்துடன் ஷாப்பிங் செய்ய வருபவர்கள் பொழுது போக்கும் விதமாக ஒவ்வொரு நாளும் திரை நட்சத்திரங்கள் சின்னத்திரை கலைஞர்களின் ஆடல்,பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்..
காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற உள்ள ஷாப்பிங் திருவிழா கண்காட்சிக்கான அனுமதி கட்டணம் 50 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்…

