Skip to content
Saturday, May 16, 2026
Latest:
  • 1000கட்டணத்தில்வாரிசுபெயர்மாற்றநடைமுறைதேவை
  • ஈரோடு பூம்புகார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி
  • ஈரோடு அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு
  • பதிவுத்துறை தலைவருக்கு FAIRA தலைவர் பாராட்டு
  • இன்றைய ராசிபலன் – 15-05-2026
செய்திஅலசல் l Seidhialasal

செய்திஅலசல் l Seidhialasal

Tamil Online NewsPaper

Visitors: 0

  • இந்தியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
  • புதுச்சேரி
  • மருத்துவம்
  • கிரைம்
  • ஜோ‌திட‌ம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • e-Papers
    • Today e-Paper
    • Other e-Papers
    • English
பெயர்சேர்த்தல் திருத்தல்படிவங்கள்மையத்தில் தரலாம்
மாவட்டம் 

பெயர்சேர்த்தல் திருத்தல்படிவங்கள்மையத்தில் தரலாம்

20 December 202520 December 2025 Seidhi Alasal Name addition and correction forms can be submitted at the center.

Loading

பொதுமக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து உதவி மையங்களில் வழங்க வேண்டும் :  திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் அறிவிப்பு :

திருவள்ளூர் டிச 20 : இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2026 தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணியை மேற்கொள்ள கடந்த 27.10.2025 அன்று அறிவிப்பு செய்தது. இதில், 04.11.2025 முதல் 14.12.2025 வரை வீடுதோறும் சென்று கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு பெறப்பட வேண்டும் என்றும்,  19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்றும், 19.12.2025 முதல் 18.01.2026 வரை உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலமாகவும், 19.12.2025 முதல் 10.02.2026 வரை விசாரணை மற்றும் சரிபார்ப்பு செய்து 17.02.2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி,பொன்னேரி, திருத்தணி,திருவள்ளூர்,பூந்தமல்லி, ஆவடி,மதுரவாயல்,அம்பத்தூர், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கணக்கெடுப்பு படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, வாக்காளர்களின் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டு படிவங்கள் திரும்ப பெறப்பட்டு, இறுதி செய்யப்பட்டு, 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு உள்ளது.
மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களும், பிற மாவட்டங்களிலிருந்து நிரந்தரமாக குடிபெயர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வரும் நபர்கள் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாத பட்சத்தில், தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள உறுதி மொழி படிவத்துடன் படிவம்-6 பூர்த்தி செய்து வழங்கிடவும் மற்றும் 01.01.2026 அன்றைய தேதியில் 18 வயதாகும் அனைத்து நபர்களும் தங்களது பெயர்களை புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ள உறுதி மொழி படிவத்துடன் படிவம்-6 னை வழங்கிடவும், மேலும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றங்கள் இருப்பின் படிவம்-8 னை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடமோ, அப்பகுதியின் வாக்காளர் பதிவு அலுவலகத்திலோ அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலகத்திலோ வழங்கலாம். மேலும், புதியதாக வாக்காளர் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள ஏதுவாக, எதிர்வரும் 20.12.2025 (சனி) மற்றும் 21.12.2025 (ஞாயிறு) ஆகிய தினங்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் உதவி மையங்கள் செயல்பட உள்ளது. பொதுமக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து இந்த உதவி மையங்களில் வழங்கிடுமாறு திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
0Shares
  • ← 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை
  • குன்னூர்தொகுதிஎன்வாக்குசாவடிவெற்றிவாக்குசாவடி →

You May Also Like

46அடி விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

28 March 202328 March 2023 Seidhi Alasal 0

அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் வெளீயிட்டாளர் சங்கத்தின் தேசிய தலைவருமான செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியருமான் Dr.S.இராஜேந்திரன் அவர்களின் பிறந்த வாழ்த்துக்கள் – சென்னை

6 May 20226 May 2022 Seidhi Alasal 0

காவலர்களுக்கிடையான இறுதி போட்டிகள்…. வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசுகள் வழங்கி பாராட்டு

25 July 2022 Seidhi Alasal 0

Ads

இந்தியா

Good news for Indians living in the USA.. The postal parcel service has started again!
இந்தியா உலகம் 

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு குட் நியூஸ்..மீண்டும் தொடங்கியது தபால் பார்சல் சேவை!

15 October 202515 October 2025 Seidhi Alasal

Loading

இந்தியாவில் இருந்து இன்று முதல் அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது. புதிய வரி விகிதம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்காக

Former Canadian Prime Minister enjoys boating with wife..? Viral scenes!
உலகம் 

முன்னாள் கனடா பிரதமர் பாப் பாடகியுடன் படகில் உல்லாசம்..? வைரலான காட்சிகள்!

13 October 202513 October 2025 Seidhi Alasal
Diesel subsidy cancellation: Intensifying protest against the chief!
அரசியல் உலகம் 

டீசல் மானியம் ரத்து: அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

7 October 20257 October 2025 Seidhi Alasal
Eiffel Tower closure.. Tourists disappointed!
அரசியல் உலகம் 

ஈபிள் கோபுரம் மூடல்..சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

4 October 20254 October 2025 Seidhi Alasal
A peace agreement is established.. Hamas is subservient to America!
உலகம் கிரைம் 

அமைதி ஒப்பந்தம் ஏற்பு.. அமெரிக்காவுக்கு அடிபணிந்தது ஹமாஸ்!

4 October 20254 October 2025 Seidhi Alasal
Copyright © 2026 செய்திஅலசல் l Seidhialasal. All rights reserved.
Theme: Seidhi Alasal by Seidhi Alasal.