திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் “அன்புக்கரங்கள்” திட்டத்தின் கீழ், பெற்றோரை இழந்த 8 கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1.60 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார் :
திருவள்ளூர் டிச 17 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 433 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 145 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 88 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 74 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி24 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 102 மனுக்களும் என மொத்தம் 433 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் “அன்புக்கரங்கள்” திட்டத்தின் கீழ், பெற்றோரை இழந்த 8 கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூ.20000 வீதம் மொத்தம் ரூ.160000 மதிப்பீலான விலையில்லா மடிக்கணினியை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார்.மேலும், தூய்மை பணியாளர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதற்கு தீர்வுக்கான சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், துணை ஆட்சியர் (பயிற்சி) செ.சண்முக பிரீத்தா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையர் (கலால்) கணேசன், கூடுதல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நிர்மலா, மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.