மின்கம்பியாள்உதவியாளர் தகுதி தேர்வு ஒத்திவைப்பு

Loading

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு ஒத்திவைப்பு : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் : 

திருவள்ளூர் டிச 15 : 13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அத்தேர்வானது நிர்வாக காரணங்களினால் 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் வடசென்னை,அம்பத்தூர்,கோயம்புத்தூர் ,திருப்பூர், கடலூர்,திருச்சிராப்பள்ளி,நாகப்பட்டினம்,திண்டுக்கல்,மதுரை,சேலம்,ஈரோடு,தஞ்சாவூர்,திருநெல்வேலி,ஓசூர்,உளுந்தூர்பேட்டை,செங்கல்பட்டு, திருவண்ணாமலை,விருதுநகர் 19. வேலூர் 20. நாகர்கோவில் 21. நாமக்கல் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறவுள்ளது.

மேலும், விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை பெற்று கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு,பிரதாப் தெரிவித்துள்ளார்.
0Shares