வன்கொடுமை தடுப்பு &கண்காணிப்பு குழு கூட்டம்
![]()
திருவள்ளூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மூன்றாம் காலாண்டு கூட்டம் :
திருவள்ளூர் டிச 13 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மூன்றாம் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் எஸ்.சி,எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவு வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் தீருதவித்தொகை உரிய காலக்கெடுவிற்குள் வழங்குவது தொடர்பாகவும், வன்கொடுமை நிலுவை வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் சார் ஆட்சியர் (பொன்னேரி) கு.ரவிகுமார், வருவாய் கோட்டாட்சியர்கள் திருவள்ளூர்,திருத்தணி ரவிச்சந்திரன், என்.எம்.கனிமொழி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செந்தில்குமார், காவல் துறையினர், சமூக நீதி பிரிவு அலுவலர், அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.சி,எஸ்.டி பிரிவு, மாவட்ட மற்றும் அலுவல் சாரா குழு உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

