தனிஷ்க்ஜூவல்லரி3நாள்உயர்ரகவைரநகைகண்காட்சி
![]()
கோவை
கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பாக, 3 நாட்கள், உயர் ரக வைர நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
டாடா குழுமத்தின் தங்கம் மற்றும் வைர நகை விற்பனை பிராண்டான தனிஷ்க் ஜூவல்லரி சார்பாக, வரும் 13ம் தேதி சனிக்கிழமை முதல் 15ம் தேதி திங்கள்கிழமை வரை கோவை பந்தயசாலையில் உள்ள தாஜ் விவான்தா உணவகத்தில், இந்த உயர் ரக வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறவுள்ளது.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை ஒப்பனக்கார வீதியில் அமைந்துள்ள தனிஷ்க் ஜிவல்லரி ஷோரூமில் நடைபெற்றது. அப்பொழுது இந்நிறுவனத்தின் கோவை ஏரியா பிஸ்னஸ் மேலாளர்கள் சிவரஞ்சனி மற்றும் நவீன் குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
டிசம்பர் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தாஜ் விவான்தா ஹோட்டலில் இந்த உயர் ரக வைர நகை கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் 500க்கும் அதிகமான டிசைன்களில் வைர நகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளது எனவும், இவை அனைத்தும் திருமண சீசனுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டவைகளாகும் என்றனர்.
“தனிஷ்க் வைர நகைகள் முழுக்க முழுக்க இயற்கை வைரங்கள் எனவும், வைரங்களின் கட் மற்றும் தெளிவுதன்மை மிக நேர்த்தியாக இருக்கும்,” என சிவரஞ்சனி தெரிவித்தார்.
இந்த கண்காட்சியை காணவரும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும்படி சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான நகையை அன்றே வாங்கலாம் அல்லது அதன் 50 சதவிகித கட்டணத்தை செலுத்தி அந்த நகையை அன்றைய விலைக்கு முன்பதிவு செய்துவைத்துக்கொள்ளலாம். மீதம் நகைக்கான கட்டணத்தை நகையை பின்னர் வாங்க வரும்போது செலுத்தலாம் என்ற சிறப்பு திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளதாக கூறினார்.
மேலும், தங்களின் பழைய தங்கத்தை வைரமாக மாற்றும் வசதியும் இந்த கண்காட்சியில் இடம்பெறும். அதன்படி, தங்கத்தின் மதிப்புக்கு ஏற்ப வைர நகைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார். இத்துடன், திருமண நகைகள் வாங்கும் பெண்ககளுக்கு சிறப்பு பிரைடல் போட்டோ சூட், இந்த பிரத்தியேக அரங்கில் செய்துகொடுக்கப்படும். இவையெல்லாம் இந்த 3 நாட்கள் நடைபெறும் சிறப்பு என தெரிவித்தனர்.

