சமத்துவத்திற்கானதேசியஅளவிலானவிழிப்புணர்வு
![]()
திருவள்ளூரில் பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான விழிப்புணர்வு பேரணி : அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் நவ 27 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான விழிப்புணர்வு பேரணியை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பாலின சமத்துவம் குறித்த பதாகைகளை கைகளில் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.மீண்டும் பேரணி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் முடிவடைந்தது.
இதில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயகுமார்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் செல்வராணி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

