லாட்ஜ்க்கு அழைத்த காதலன்… ஆசையாய் சென்ற இளம்பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்!
காதலனின் நண்பன் இளம்பெண்ணை கோவாவுக்கு அழைத்து சென்று அறை எடுத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
தெலுங்கானா மாநிலம் ஜனகாம அடுத்த ஜங்கான் பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். அதே பகுதியை சேர்ந்தவர் முகமது ஒவைசி (வயது 23) . இருவரும் காதலித்து வந்தது. இந்தநிலையில் முகமது ஒவைசி தனது காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்க முடிவு செய்தார். கடந்த மாதம் இளம்பெண்ணுக்கு முகமது போன் செய்து உன்னுடன் தனியாக பேச வேண்டும் என வரவழைத்தார். இதனை உண்மை என நம்பி பின்னர் நடக்கபோவதை அறியாமல் ஆசையாய் சென்ற இளம்பெண் காதலனை தேடிச்சென்றார்.
முகமது ஒவைசி கார் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் தனது நண்பர்களான பவன்குமார், சிவக்குமார், அப்துல் கியூம், பூஜா சமந்த் ரெட்டி, சாய் சரண் ரெட்டி, சாய்ராம், நுகலா ரவி, ஜெட்டி சஞ்சய் ஆகியோருடன் தயாராக இருந்தார். அங்கு வந்த காதலியை காரில் ஏற்றிக்கொண்டு ஜன்கனில் உள்ள லாட்ஜ்க்கு அழைத்து சென்றனர். இளம்பெண்ணை மிரட்டை ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனை வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி அனுப்பி வைத்தனர். இதனால் நடந்த சம்பவத்தை இளம்பெண் யாரிடமும் தெரிவிக்கவில்லை. சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பின்னர் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் இளம்பெண்ணிடம் வந்து காதலிப்பதாக தெரிவித்தார். அவரும் இளம்பெண்ணை கோவாவுக்கு அழைத்து சென்று அறை எடுத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் இளம்பெண்ணை அவரது சொந்த ஊரில் விட்டு தப்பி சென்றார்.
இளம்பெண் இது குறித்து தனது சகோதரியிடம் தெரிவித்தார். இளம்பெண்ணின் சகோதரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. இதனையடுத்து போலீசார் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 10 வாலிபர்களையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.