பழங்குடியின மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்த ஆணையர்!
நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில், தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் .ஸ்ரீ.ஜடோத்து ஹுசைன் அவர்கள், அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பழங்குடியின மக்களிடம் கலந்துரையாடி, கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
முதலாவதாக மாண்புமிகு தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் அவர்கள், உதகை வட்டம், பொக்காபுரம் அரசு உண்டு உறைவிடப்பள்ளியில், உள்ள ஆய்வகம், நூலகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பு அறை, சமையில் அறை மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களின் விடுதியின் அடிப்படை வசதிகளை உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணாக்கர்களுக்கு ரெயின் கோட்டுகளை வழங்கியும், பசுமை படையின் சார்பில், நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணாக்கர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் அவர்கள், பள்ளியில் கடந்த 2023-2024 மற்றும் 2024-2025 ஆகிய வருடங்களில் தொடர்ந்து பத்தாம் வகுப்பில், 100% தேர்ச்சி பெற்ற பழங்குடியின பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தும், நாவா சங்கம் சார்பில், குழந்தைகள் நிதி திட்டத்தின் கீழ், 29 பள்ளி மாணாக்கர்களுக்கு தலா ரூ.2,000/-விதம், 2 டிப்ளமோ டிகிரி மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.3,000/-விதம், 2 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.5,000/-விதம் மற்றும் 1 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.10,000/-விதம், என மொத்தம் 34 நபர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.84,000/-த்திற்கான காசோலையினை வழங்கியும், பழங்குடியினர் மாணவியிர்களின் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.இந்நிகழ்வுகளின் போது, தேசிய பழங்குடியினர் ஆணைய இயக்குநர் கல்யாண் ரெட்டி, தனிச்செயலாளர் ஸ்ரீ.அசோக்குமார் லக்கரசு, முதுலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் அருண், உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநர் (பொறுப்பு) உதயகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் பீட்டர் ஞானராஜ், தாட்கோ (பொது மேலாளர்) ஆர்ணி பேர்ள், சோலூர் பேரூராட்சி திருமதி கௌரி, வட்டாட்சியர்கள் சங்கர்கணேஷ் (உதகை), நடேசன் (பழங்குடியினர் நலத்துறை), கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணி, சோலூர் பேரூராட்சி (செயல் அலுவலர்) ஹர்சத், பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி தலைமையாசிரியர் (பொக்காபுரம்) பூங்கோதை, பழங்குடியினர் மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.