இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்த ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர்!

Loading

அடையாளம்பட்டில் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் பி.ஆனந்தராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், அடையாளம்பட்டு ஊராட்சியில் இயற்கை உரம் தயாரிக்கும் கூடத்தில் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து இயற்கை உரம் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தலைமையில் ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் பி.ஆனந்தராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மக்கும் குப்பை மக்காத குப்பை கொண்டு இயற்கை உரத்தை மாவட்ட ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் பி. ஆனந்தராஜ் இடம் வழங்கினார்.இதில் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜவேல், உதவி இயக்குநர் ஊராட்சிகள் யுவராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares