500 ரோபோட்டிக் முட்டிக்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து பிரசாந்த் ஹாஸ்பிடல் சாதனை!
வேலிஸ் ரோபோ மூலம் 500 ரோ போட்டிக் முட்டிக்கால் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து பிரசாந்த் ஹாஸ்பிடல் சாதனை படைத்துள்ளது.
சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பிரசாந்த் ஹாஸ்பிடல் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொண்டு சேவை செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் இந்த மருத்துவமனை அறுவை சிகிச்சை செய்வதில் பல்வேறு சாதனைகளையும் புரிந்துள்ளது. சமீபத்தில் பிரசாந்த் ஹாஸ்பிடல் நிர்வாக இயக்குனர் பிரசாந்த் கிருஷ்ணா மற்றும் மூத்த எலும்பில் நிபுணர் ஆறுமுகம் ஆகியோர் கொண்ட குழுவினர் நவீன நான்காவது தலைமுறை வேலிஸ் ரோபோ மூலம் 500 ரோபோடிக் முட்டிகால் மாற்று அறுவை சிகிச்சை செய்து வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த மிகப்பெரிய சாதனையை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேளச்சேரியில் உள்ள வெஸ்டர்ன் ஹோட்டலில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது ,அப்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரசாந்த் ஹாஸ்பிடல் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா, நோயாளிகளின் மூட்டு கால் மாற்று அறுவை சிகிச்சை முறை குறித்து விளக்கினார்.
அதுமட்டுமல்லாமல் பல்வேறு சந்தேகங்களுக்கும் அவர் விடை கூறினார். அதைப்போல் மூட்டு மாற்று அருவி சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள் தாங்கள் பட்ட கஷ்டத்தை பிரசாந்த் ஹாஸ்பிடல் நீக்கி புது வாழ்வை தந்துள்ளதாக பெருமிதமாக பேசினார். மேலும் ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சையின் பலன்கள் புதிய தொழில் முன்னேற்றத்தின் திட்டங்கள் மற்றும் நோயாளிகளுக்கான சிறந்த முறை இல் சிகிச்சை அளிப்பது குறித்து அப்போது டாக்டர் பிரசாந்த் சார் விளக்கமாக பதில் அளித்தார்.