டைரக்டர் ஜித் தயாரிக்கும் புதிய பட ஷூட்டிங் நிறைவு.!

Loading

45 நாட்களாக பழனியில் நடைபெற்று வந்த டைரக்டர் ஜித் தயாரிக்கும் புதிய பட ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது.

பழனியில் பிறந்த பழனி பாலு எனும் புனைப்பெயர் கொண்ட இசையமைப்பாளர் ஜித்.. அவர்கள் இசையமைத்த பத்து திரைப்படங்களில் ஐந்து திரைப்படங்கள் வெளியாகி உள்ளன ,அவை தப்பாட்டம் குற்றப் பின்னணி வீமன், தென் தமிழகம், போன்ற திரைப்படங்கள் அவர் தற்போது ஜித் சினிமாஸ் ஜகஜித் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி அவரே இயக்கி இசையமைத்து நடித்து வருகிறார் .

அந்த திரைப்படம் கடந்த 45 நாட்களாக பழனியிலும் பழனிய சுற்றிய பகுதிகளிலும் சூட்டிங் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது இன்று இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிரபல நடிகர் கராத்தாராஜன் , கதாநாயகர்களாகஅனீஸ் பார்வதி, அபர்ணா அவர்களும்,பேனா மணி , வெண்ணிலா ரவி, பொள்ளாச்சி கே ராஜன், இதலிக்கா, அவிநாசி ஞானவேல், முக்கிய கதாபாத்திரத்தில் அசோக் தமிழ்,போன்ற திரைப்பட நடிகர்கள் நடிகைகள் பங்கு பெற்ற சூட்டிங் நடைபெற்றது.

இத்திரைப்படத்தில் தயாரிப்பாளர் இயக்குனர் இசையமைப்பாளர் நடிகர் போன்ற பரிமாணங்களை செய்து கொண்டுள்ளார் பழனி பாலு என்ற ஜித் அவர்கள் .. இத் திரைப்படத்தின் கதை கரு நிகரிக மஞ்சு அவர்கள் ஒளிப்பதிவாளர் பரத், கோ டைரக்டர் அசோக் தமிழ், மேக்கப் அண்ட் காஸ்டியூம் சுஜித் ஜீவா. சிறந்த கதை அம்சம் கொண்ட விழிப்புணர்வு திரைப்படம் என்றும் விரைவில் வெளிவர உள்ளது என்றும் இயக்குனர் ஜித் அவர்கள் தெரிவித்தார்..

0Shares