115 நாட்களில் 30 மனைவிகள் கொலை..கணவர்களே காரணம்!
கடந்த 115 நாட்களில் 30 மனைவிகள், அவர்களுடைய கணவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
மத்தியபிரதேசத்தில் ராஜா ரகுவன்ஷி எனும் நபர், அவரது மனைவி சோனம்,கொலை செய்யப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பெண் கொலை சம்பவங்கள் குறித்து வெளியான புள்ளிவிவரங்கள் திகைப்பூட்டும் உண்மையைக் வெளிப்படுத்துகின்றன.
அதன்படி, கடந்த 115 நாட்களில் 30 மனைவிகள், அவர்களுடைய கணவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், சராசரியாக ஒவ்வொரு 4 நாட்களுக்கும் ஒருவராக பெண்கள் தங்கள் கணவர்களால் உயிரிழக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொலைக்கான முக்கிய காரணங்கள்:நடத்தை சந்தேகம் – 10+ கொலைகள்,போதை மற்றும் மதுபிரியம் – 6 கொலைகள்,குடும்ப வன்முறை, வரதட்சணை பிரச்சனை, மனஅழுத்தம் – மீதமுள்ள அனைத்து கொலைகளும் நடந்துள்ளது,
இந்த புள்ளிவிவரங்கள், இந்திய குடும்ப அமைப்புகளில் பெண்கள் எதிர்கொள்ளும் உள்நாட்டுக் கொடுமை, தக்க பாதுகாப்பு அமைப்புகளின் குறைபாடு, மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளின் தீவிரம் குறித்து கேள்வி எழுப்புகின்றன.
சமூக வலைதளங்களில் ஒரு சில தனிப்பட்ட சம்பவங்களை மீம்ஸ்களாக மாற்றி பரப்புவது, உண்மையான பெண்கள் மீது நடைபெறும் வன்முறைகளின் அருவருப்பான வேதனையை மறைக்கக்கூடிய அபாயகரமான செயலாக பார்க்கப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.