12ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு அறிமுக விழா..அமைச்சர் நாசர் பங்கேற்பு!

Loading

12ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு,வாஷிங்டன், டி.சி – அமெரிக்காவில் அக்டோபர் 3 ,4 ,5 2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

உலகத் தமிழர் பொருளாதார நிறுவனம், மற்றும் சென்னை வளர்ச்சிக்கழகம், சென்னை இணைந்து 12ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு,வாஷிங்டன், டி.சி – அமெரிக்காவில் அக்டோபர் 3 ,4 ,5 2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.இந்த மாநாட்டில், உலகெங்கிலும் உள்ள தமிழ் தொழில்முனைவோர், நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் ஒன்றிணைத்து, உலக அளவில் தமிழர் பொருளாதார மற்றும் பண்பாட்டுப் பங்களிப்பை வலியுறுத்தும் முக்கியமான பன்னாட்டு நிகழ்வாகும். உலகமெங்கும் இருந்து தலைசிறந்த வல்லுநர்கள், பொருளாதார மேதைகள், தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் ஒன்றிய அரசின் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த மாநாட்டின்இணையதளத் தொடக்கமும் மாநாட்டு விளக்க அறிக்கை வெளியீடும் அறிமுக விழா ஹோட்டல் லீ ராயல் மெரிடியன், சென்னை யில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக திரு. எஸ்.எம். நாசர் மாண்புமிகு சிறுபான்மை நலத்துறை மற்றும் அயலகத்தமிழர் நலத்துறை அமைச்சர்,தமிழ்நாடு அரசு, கலந்து கொண்டார்.விஐடி பல்கலைக்கழகம், வேலூர் வேந்தர், டாக்டர் ஜி. விசுவநாதன், தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் பழனி ஜி. பெரியசாமி – தலைவர், பிஜிபி குழுமம் ,திரு. எம்.எம். அப்துல்லா – பாராளுமன்ற உறுப்பினர்திரு..கி. வீரமணி – தலைவர், ஜெம் குழுமம் டாக்டர் பீட்டர் தலைவர், மாதா மருத்துவக் கல்லூரி.திரு. வி. மகாலிங்கம், ஐ.எப்.எஸ் (ஓய்வு) – முன்னாள் இந்தியத் தூதுவர் (கயானா)திரு. வீரா வேணுகோபால் முன்னாள் தலைவர், தமிழ்நாடு அறக்கட்டளை, USA டாக்டர் டி. சரவணன் – தலைவர், சேலம் சட்டக் கல்லூரிதிரு ஏ. அபுபக்கர் தலைவர், பிரசிடெண்ட் குரூப் , சென்னை.திருமதி. ஜெயந்தி தங்கபாலு தலைவர், மெகா டிவி. சென்னை. ஆகியோர்கள் கல12ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு,வாஷிங்டன், டி.சி – அமெரிக்காவில் அக்டோபர் 3 ,4 ,5 2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது

முன்னதாக மாநாட்டு நிகழ்வுகள் நோக்கம் எதிர்பார்க்கும் விளைவுகள் குறித்து உலகத் தமிழர் பொருளாதார நிறுவனம் மற்றும் 12ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு தலைவர் டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் விளக்கிக் கூறினார்இந்தநிகழ்வில் தொழில்துறையினர், தொழில் கூட்டமைப்பினர்,பேராசிரியர்கள் தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

0Shares