MLA முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
வில்லியனூர் பெரியபேட்டில் வடிகால் வாய்க்கால் அமைக்க இடையூறாக இருந்த ஹைடிசைன் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து வைத்த இடத்தை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம் செய்யப்பட்டன.
புதுச்சேரி வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியபேட் நீர்பாசன வடிகால் வாய்க்காலுக்கு (வினித் நகர், மாரியம்மன் கோயில் தெரு முதல் வி.மணவெளி பிரதான சாலை வரை) பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனக் கோட்டம் மூலம் ரூபாய். ஒரு கோடியே 54 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டில் புதியதாக கான்கிரீட் சுவர்களுடன் கூடிய வடிகால் வாய்க்கால் (PCC DRAIN) அமைக்கும் பணி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.
இந்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், வாய்க்கால் செல்லும் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஹைடிசைன் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்திருந்தது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள், நில அளவையாளர்களை கொண்டு ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியை அளந்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நியாயமான முறையில் முறையிட்டுள்ளனர். ஆனால் அந்த தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பை அகற்றாமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் வாய்க்கால் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்களிடம் முறையிட்டனர்.
இதையடுத்து இன்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள், நில அளவையாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுடன் ஹைடிசைன் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது வடிகால் வாய்க்கால் அமையுள்ள அரசு நிலத்தை ஹைடிசைன் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் அங்கேயே முகாமிட்டு, ஜேசிபி இயந்திரத்தை சம்பவ இடத்திற்கு வரவழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற செய்தார். தொடர்ந்து தற்போது வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்ட பணி, இன்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்களின் தீவிர முயற்சியால் மீண்டும் தொடங்கப்பட்டதிற்கு, அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இதில், பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷணன், உதவிப் பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர் சங்கர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் அங்காளன், செல்வநாதன், ஹரி கிருஷ்ணன், அன்பு நிதி, மந்திரி குமார், ஜிப்மர் செல்வம், செல்வம், தனகோடி, காளிதாஸ், சேகர், விஜயகுமார், பிரவீன், பாஸ்கர், சுபாஷ், மணி, மாரி, பிரகாஷ், சந்தோஷ், திமுக நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜ், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் காளி, ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், கிளைக் கழக நிர்வாகிகள் ஜனா, மிலிட்டரி முருகன், பாலகுரு, வாசு, ராஜேந்திரன், ராமஜெயம், லூர்தநாதன், செல்வம், முத்து, கோதண்டம், அன்பு, வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.