ஜூலை 9ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்..தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

Loading

ஜூலை 9ஆம் தேதிபுதுச்சேரியில், வேலை நிறுத்தம், முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என அனைத்து தொழிற்சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது

நாடு தழுவிய அளவில் 2025 ஜூலை 9 ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது. இப் போராட்டத்தை புதுச்சேரியில் நடத்துவது சம்மந்தமாக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:2025. ஜூலை.9 ஆம் தேதி புதுச்சேரியில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம்- பந்த் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது

அனைத்து நிறுவனங்களுக்கும் ஆதரவு கேட்டு கடிதம் கொடுப்பது
ஜூன் 23/24/25 திங்கள், செவ்வாய், புதன், ஆகிய தேதிகளில் அனைத்து நிறுவனங்களுக்கும் ஆதரவு கேட்டு கடிதம் கொடுப்பது

தெருமுனை கூட்டம் நடத்துவது.30.6.2025 திங்கள் கிழமை மாலை 5 மணி சேதராப்பட்டு தொழிற்பேட்டை

30.6.2025 திங்கள் கிழமை மாலை 5 மணி திருவாண்டார் கோயில், தொழிற்பேட்டை
1.7.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை
1.7.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை, ஆகிய பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது

வாகன பிரச்சாரம்,புதுச்சேரி முழுவதும்,வேலை நிறுத்த பந்த் போராட்டத்தினை விளக்கி ஜூலை 3, 4, 5 , வியாழன், வெள்ளி, சனி,மூன்று தினங்கள் வேன் பிரச்சாரம் செய்வது

மறியல் மையங்கள்,ஜூலை 9 பந்த், மறியல் போராட்டம் புதிய பேருந்து நிலையம், சேதராப்பட்டு, மதகடிப்பட்டு, திருக்கனூர், வில்லியனூர், அரியாங்குப்பம், பாகூர், காரைக்கால் ஆகிய மையங்களில் நடத்துவது.

இந்திய நாட்டிலுள்ள அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வாரி கூட்டமைப்புகள் (18.03.2025) அன்று இந்திய தலைநகர் டெல்லியில் கூடி தொழிலாளர்களின் தேசிய பேரவை கூட்டத்தை கூட்டின. (National Convention of Workers).இந்த பேரவை கூட்டம் இந்திய உழைக்கும் மக்கள் சந்திக்கக்கூடிய பற்றி எரியும் பிரச்சனைகள் குறித்து விவாதித்துள்ளது.

அப்போது, தொழிலாளர்கள் சார்பாக தனித்தும் கூட்டாகவும் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்துள்ளதோடு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், சட்டத்திருத்தங்கள் மேற்கொள்வது பற்றி தேசிய பேரவை விவாதித்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதென ஏகமனதாக முடிவு செய்துள்ளது.

இப்போராட்டத்தை புதுச்சேரியில் முழு வெற்றியடைய செய்வதற்காக கூடிய அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வாரி கூட்டமைப்பின் புதுச்சேரி மாநில கூட்டம், இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுச்சேரி அரசு புதுச்சேரி மாநில தொழிலாளர்களின் நலனை முற்றாக புறக்கணிப்பதையும் விவாதித்து புதுச்சேரி அரசை வலியுறுத்தும் கோரிக்கைகளையும் இணைத்து (9.07.2025) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில்பங்கேற்பது, ஜூலை 9 புதுச்சேரியில், வேலை நிறுத்தம், முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என அனைத்து தொழிற்சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது

கோரிக்கைகள்:

1. புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற்றிடு!

2. அமைப்புசாரா தொழிலாளர், ஒப்பந்த தொழிலாளர், திட்டம் சார்ந்த தொழிலாளர் உட்பட அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000/- மாதமொன்றிற்கு நிர்ணயம் செய்திடு.

3. ஒப்பந்த, தினக்கூலி, வெளிச்சந்தை முறை, பயிற்சியாளர் போன்ற பெயர்களில் நடக்கும் சுரண்டலுக்கு முடிவு கட்டு. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடு!.

4. அமைப்புசாரா தொழிலாளர் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 9000 மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்திடு,

மீனவ சமூகத்தினர் ஆகியோரை பதிவு செய்து ஓய்வூதியம் உட்பட சமூக பாதுகாப்பு திட்டங்களை உருவாக்கிடு.

5. பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்பவும் அமுலாக்கு!

6. போனஸ், வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை போன்றவைகளுக்கு உள்ள உச்சவரம்பை நீக்கு. பணிக்கொடை தொகையை அதிகப்படுத்து!

7. விண்ணப்பித்த 45 நாட்களுக்குள்ளாக தொழிற்சங்கத்தை பதிவு செய்வதை கட்டாயமாக்கு!

8. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, உணவு, மருந்து, வேளாண் இடுபொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்திடு, பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய கலால் வரியை கணிசமாக குறைத்திடு, உணவு பாதுகாப்பை உத்திரவாதப்படுத்தி, பொது விநியோக திட்டத்தை பரவலாக்கு.

9. பொதுத்துறை நிறுவனங்கள், அரசு துறைகள், தனியார் மயத்தை நிறுத்திடு ,தேசிய பண மயமாக்கல் திட்டத்தை (NMP) ரத்து செய், தற்போது உள்ள சுரங்க சட்டத்தை திருத்திடு, நிலக்கரி சுரங்கங்கள் உட்பட சுரங்கங்களின் 50% லாபத்தை ஆதிவாசிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட உள்ளூர் சமூக மேம்பாட்டிற்கு ஒதுக்கிடு.

10. விவசாய பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை C2 + 50 என்ற முறையில் நிர்ணயம் செய். விவசாயிகளுக்கு கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்று!.

11. மின்சாரத் திருத்த சட்டத்தை திரும்பப் பெறு!. மின்சாரத்தை தனியார்மயமாக்காதே!. ஸ்மார்ட் மீட்டர் முறையை கைவிடு!

12. வேலை பெறுவதை அடிப்படை உரிமையாக்கு!. காலிப் பணியிடங்களை நிரப்பு!. ம.கா.தே.ஊ.வே திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்து!

13. கல்வி, மருத்துவம், தண்ணீர் அனைவருக்கும் கிடைப்பதை உரிமையாக்கு!. புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறு!. அனைவருக்கும் வீட்டு வசதியை உறுதி செய்திடு!

14. வன உரிமைச்சட்டத்தை கடுமையாக அமுலாக்கு!.
2023 – வனப் பாதுகாப்புச் சட்ட திருத்தத்தை திரும்பப் பெற்றிடு!.

15. கட்டட தொழிலாளிக்கும் இஎஸ்ஐ திட்டத்தை விரிவுபடுத்து!. புலம்பெயர் தொழிலாளர் சட்டத்தை வலிமைப்படுத்து!

16. பெரும் செல்வந்தர்களுக்கு வரி விதித்திடு, கார்ப்பரேட் வரியை அதிகப்படுத்திடு, சொத்து வரி மற்றும் பரம்பரை வரியை மீண்டும் கொண்டு வந்திடு.

17. அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை நிறுத்து!. கருத்துரிமை,
மதச் சுதந்திரம்,
பன்முக கலாச்சாரம், கூட்டாட்சி முறை மீதான தாக்குதலை நிறுத்து!.

18. புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தை உரிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் செயல்படுத்தி ஊக்கப்படுத்திடு!

19. புதுச்சேரி அரசு 2024 ஆம் ஆண்டு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை நடைமுறைப்படுத்திடு.

20. மூடப்பட்டுள்ள பஞ்சாலைகள் மற்றும் செயல்படாமல் உள்ள பாசிக், பாப்ஸ்கோ போன்ற அரசு சார்பு நிறுவனங்களை திறந்து திறன் பட நடத்தி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடு.

21. அரசு பொதுத்துறை நிறுவனங்கள்,
அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், முகமைகள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊழியர்களின் ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்கிடு.

0Shares