105 முறை ரத்த தானம் வழங்கிய தன்னார்வலர்..உலக ரத்ததான தன்னார்வலர்கள் தின வாழ்த்து.!
தானத்தில் சிறந்த தானமான ரத்த தானத்தை வழங்குவோம்! பல உயிர்களை காப்போம்!! நம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை நிலை நாட்டுவோம் என 105 முறை ரத்த தானம் வழங்கிய தொடர் ரத்ததான தன்னார்வலர் வெற்றிச்செல்வம் உலக ரத்ததான தன்னார்வலர்கள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
105 முறை ரத்த தானம் வழங்கிய தொடர் ரத்ததான தன்னார்வலர் வெற்றிச்செல்வம் உலக ரத்ததான தன்னார்வலர்கள் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:.உலகில் உள்ள பல கோடி உயிர்களை தினமும் காப்பாற்றிக் கொண்டிருக்கின்ற, கடவுளின் உன்னதமான மனிதனுள் ஓடிக் கொண்டிருக்கும் ரத்தத்தை தானமாக வழங்கிக் கொண்டிருக்கின்ற அனைத்து ரத்ததான தன்னார்வலர்களுக்கும்105 முறை ரத்ததானம் வழங்கி உலக சாதனை புரிந்த புதுச்சேரி தொடர் ரத்ததான தன்னார்வலர், பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் டாக்டர் க.வெற்றிச் செல்வம் உலக ரத்ததான தன்னார்வலர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் வெற்றி செல்வம் ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு செய்தி குறிப்பு அளித்துள்ளார்:
மனிதனின் கைரேகைக்கு எப்படி மாற்று இல்லையோ அது போன்று மனிதனின் உடலில் உற்பத்தியாகும் ரத்தத்திற்கு மாற்று இல்லை.மாற்று உறுப்புகளை செயற்கை முறையில் தயாரித்து மனிதனின் உடலில் பொருத்துவது போல் ரத்தத்தை செயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது.எவ்வளவு பெரிய அறுவை சிகிச்சையாக இருந்தாலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவை சிகிச்சை செய்வதென்றாலும் உடல் முக்கிய உறுப்புகளான இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், எலும்புகள் ஆகியவற்றை மாற்றி பொருத்துவதற்கும் அறுவை சிகிச்சை செய்வதற்கும் ரத்தம் மிகவும் அவசியமானது ஒன்று.
ஆகவே உயிர் காக்கும் உன்னதமான சக்தியான மனிதனின் உடலில் ஓடுகின்ற அந்த ரத்தத்தை தானமாக அளித்துக் கொண்டிருக்கின்ற தெய்வத்திற்கு சமமான ரத்ததான தன்னார்வலர்களை இந்த தருணத்தில் வாழ்த்துவது நமது கடமை.
மேலும் தினமும் மருத்துவமனைகளில் பல்வேறு அறுவை சிகிச்சைகள், தீ காயம் பட்டவர்களுக்கு, உடல் உறுப்புகள் மாற்றி பொருத்தம் அறுவை சிகிச்சைகள், பெரிய விபத்துகளால் ஏற்பட்ட எலும்பு முறிவு சரி செய்யும் சிகிச்சைகள், மூளைச் சாவு ஏற்பட்டவர்களுக்கு, நரம்பியல் அறுவை சிகிச்சைகள், கேன்சர் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, டெங்கு உள்ளிட்ட தொற்று கிருமிகளால் ஏற்பட்ட நோய்களுக்கு சிகிச்சைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இவை அத்தனைக்கும் முழு ரத்தமும் (whole blood) ரத்தத்திலிருந்து பிரிக்கப்பட்ட காரணிகளானபிளாஸ்மா(Plasma),ரத்தத் தட்டணு க்கள் (Platelets) ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Corpuscles) வெள்ளை ரத்த அணுக்கள் வில் (White Blood Corpuscles)தேவைப்படுகின்றன.
ஆகவே ஒரு மனிதன் வழங்கும் ஒரு யூனிட் (350 ml) ரத்தமானது நான்கு உயிர்களை காப்பாற்றுகிறது.
தினமும் நடக்கின்ற அறுவை சிகிச்சைகளும் தினமும் கொடுக்கப்படுகின்ற ரத்தம் தானத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில் இன்றைக்கும் அறுவை சிகிச்சைகளுக்கு, பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு ரத்தம் பற்றாக்குறையாக தான் உள்ளது.
ஆகவே 18 வயது முதல் 65 வயதில் உள்ள ஆரோக்கியமாக உள்ள 45 கிலோ கிராம் எடைக்கு மேற்பட்ட அனைவரும் இரத்ததானம் வழங்கலாம். தானம் அளிக்கப்பட்ட ரத்தம் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தியாகின்றன. தொடர் ரத்த தானம் அளிப்பவர்களுக்கு வாழ்நாளில் ஹார்ட் அட்டாக்கும் (Heart Attack) மற்றும் எந்த வித பெரிய நோய்களும் வராது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
ஆகவே தானத்தில் சிறந்த தானமான ரத்த தானத்தை வழங்குவோம்! பல உயிர்களை காப்போம்!! நம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை நிலை நாட்டுவோம் என க .வெற்றிச்செல்வம் தெரிவித்துள்ளார்.