கழிவு மேலாண்மையின் மறுசுழற்சி தொழில்நுட்ப மாநாடு..பார்வைக்கு வைக்கப்பட்ட அதிநவீன ராட்சத இயந்திரங்கள்!
ஓசூரில் பன்னாட்டு தொழில் நிறுவனம் சார்பில், கழிவு மேலாண்மையின் மறுசுழற்சி தொழில்நுட்பம் 2025 மாநாடு மற்றும் விளக்கக் கண்காட்சி. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இரண்டாவது சிப்காட் பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் தனியார் பன்னாட்டு நிறுவனமான டெரெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற தொழிற்சாலை .கல் குவாரிகள் மற்றும் கிரஷர்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிரம்மாண்ட ராட்சத இயந்திரங்களை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதன் வாயிலாக பெரிய பாறைகளை உடைத்து ஜல்லி கற்கள், எம் சாண்ட் உள்ளிட்டவற்றை பிரித்து வழங்கும் திறன் கொண்டது ஆகும்.தற்சமயம் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் திடக்கழிவு மேலாண்மை என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதனை எதிர்கொள்ள அரசுகள் பல்வேறு யுத்திகளையும் தொழில் நுட்பத்தையும் கையாண்டு வருகின்றன. எனினும் முழுமையான தீர்வை ஏற்படுத்த முடிவதில்லை.இந்த நிலையில், ஓசூர் சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் டெரெக்ஸ் தொழிற்சாலை, கழிவுகளை கையாளுவதில் மறு சுழற்சி தொழில்நுட்பத்தை மேம்படுத்தி இயந்திரங்களை வடிவமைத்துள்ளது.குறிப்பாக இந்தியாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மறு சுழற்சி தொழில்நுட்பம் இன்றியமையாததாக உள்ளது.எனவே இதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய பிரம்மாண்ட ராட்சத இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு அதன் செயல்பாடுகளை செய்முறை விளக்கமாக வழங்கும் நோக்கில் மறு சுழற்சி தொழில்நுட்பம் 2025 என்ற தலைப்பில், ஒரு திறந்தவெளி செய்முறை மாநாட்டு நிகழ்வு நடைபெற்றது.
உலகின் மிக உயரிய சிறப்பு தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஓசூர் தொழிற்சாலையில் கழிவுகளை மீண்டும் பயன்படுத்தும் வகையில் மறு சுழற்சி செய்வதற்கான அதன் வல்லுனர்களால் விளக்கி காட்டப்பட்டது.
இதனைக் காண்பதற்காக இந்தியா உட்பட ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற அண்டை நாடுகளில் இருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன நிர்வாகிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்தியாவுக்கான வணிக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் இயக்குனர் விராஜ் பார்த்தி சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கம் அளித்து பேசினார். மொபைல் மற்றும் மட்டு மறு சுழற்சி அமைப்புகளுக்கான தீர்வுகளை ஒரே இடத்தில் வழங்குவதற்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.சிறிய உபகரணங்களிலிருந்து முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட மறுசுழற்சி துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டு வழங்கும் நோக்கத்தில் இந்த புதுமையான தீர்வுகள் கழிவு மேலாண்மை செயல்பாடுகளை எவ்வாறு மாற்றுகின்றன என்பது குறித்து விளக்கப் பட்டன.
இதில், நகராட்சி திடக்கழிவு (MSW) உயிரி சுரங்கம், சிமென்ட் துறையில் குப்பை பெறப்பட்ட எரிபொருள் (RDF) மற்றும் கட்டுமானம் மற்றும் இடிப்பு (C&D) கழிவு என்பது மறுசுழற்சியில் வேகமாக வளர்ந்து வரும் கழிவு மேலாண்மைத் துறையில் உள்ள சவால்களுக்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
டெரெக்ஸ், ஓசூரில் உள்ள அதிநவீன உற்பத்தி வசதியில் வாயிலாக மறுசுழற்சி இயந்திரங்களான ட்ரோமல்கள் மற்றும் ஷ்ரெடர்கள் என்பது எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த நிகழ்வின் வாயிலாக,முழு அளவிலான தீர்வுகள் வழங்க முடியும் என்று நம்புவதாகவும்,இவ்வாறு மறுசுழற்சியின் வாயிலாக பெறப்படும் பொருட்களைக் கொண்டு மீண்டும் அவைகள் சாலைகளை அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும், இதன் நிர்வாக இயக்குநர் ஜெய்தீப் ஷேகார் கூறினார்.
இதற்காக இந்தியாவின் அரசு துறை பிரதிநிதிகளுக்கும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அவர்களும் அழைக்கப்பட்டு பங்கேற்று உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
மேலும், அது நகரங்கள் மற்றும் பெரு நகரங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் மற்றும் குப்பைகள் மலை போல குவிந்து கிடப்பதால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க ஏதுவாக இருக்கும் என்றும், உலகளாவிய மறுசுழற்சி துறையின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் தீர்வுகளை வழங்க இதன் வாயிலாக உறுதி அளிப்பதாக,இந்த நிறுவனத்தின், UK நாட்டின், நார்தன் அயர்லாந்தில் இருந்து வந்திருந்த மெட்டீரியல்ஸ் பிராசசிங் தலைவர் கீரன் ஹெகார்டி தெரிவித்துள்ளார்.மேலும், ரீசைக்கிள்டெக் 2025 ஒரு சிறந்த மைல்கல்லைக் ஏற்படுத்தும் என தெரிவித்த அவர், தொழில்துறை தலைவர்களை ஒன்றிணைத்து, மறுசுழற்சியில் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களை இந்தியா எவ்வாறு கழிவு மேலாண்மையை மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த முயற்சி தூய்மையான, பசுமையான மற்றும் வள-திறனுள்ள உலகத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை வழங்கும் என்பதை நம்புவதாக அவர் கூறினார்.