மீண்டும் பதற்றம்: மணிப்பூரில் ஊரடங்கு ,இணையதள சேவை துண்டிப்பு..!

Loading

மெய்தி இனத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற குழுவின் தலைவர் கண்ணன் சிங் உள்பட 6 பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்ததையடுத்து மெய்தி மக்கள் மீண்டும் போராட்டம், வன்முறையில் ஈடுபட்டனர்,இதனால் மணிப்பூரில் ஊரடங்கு ,இணையதள சேவை துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி – குகி இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.ஏராளமான கட்டிடங்கள் வன்முறையில் சேதமடைந்தன.மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது.அதுமடமல்லாமல் காங்கிரஸ் கட்சி கடுமையாக பாஜக அரசை விமர்சனம் செய்தது.இதையடுத்து அரசியல் அழுத்ததில் சிக்கிய முதல்-மந்திரி பைரன் சிங் வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்காக பதவி விலகினார். இதையடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது அமைதி திரும்பியுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு மெய்தி இனத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற குழுவின் தலைவர் கண்ணன் சிங் உள்பட 6 பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்தனர்.இதை எதிர்த்து மெய்தி மக்கள் மீண்டும் போராட்டம், வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை தடுக்க பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டனர்.

அதேவேளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூரில் 5 மாவட்டங்களில் இணையதள சேவை நேற்று இரவு 11.45 மணி முதல் துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால், மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தவுபல், பிஷ்ணுபூர், காக்சிங் ஆகிய 5 மாநிலங்களில் 5 நாட்களுக்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 5 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

0Shares