இசை நாட்டிய சலங்கை பூஜை விழா..திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டு!
கண்டாதேவி இசை மற்றும் நாட்டிய அகடமி பயிற்சி நிலையத்தின் 12ம் ஆண்டு விழா மற்றும் சலங்கை பூஜை விழாவில் கலை நிகழ்ச்சியில் பங்குக்கொண்டு திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ் கேடயங்கள் வழங்கப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணதில் நேருஜி நகர் கண்டாதேவி இசை மற்றும் நாட்டிய அகடமி பயிற்சி நிலையத்தின் 12ம் ஆண்டு விழா மற்றும் சலங்கை பூஜை விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
அரக்கோணம் திருத்தணி சாலை ஜோதி ராமசாமி திருமண மஹாலில் நடைபெற்ற சலங்கை பூஜை விழாவில் கண்டாதேவி இசை மற்றும் நாட்டிய அகாடமி தலைவர் கே.ஆர்.சதீஷ் பாபு தலைமையில்,கே.ஆர்.இந்திரா வரவேற்புரை மற்றும் ஒருங்கிணைப்பில் சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு மாவட்டம் விநாயகா நாட்டியாலயா நிறுவனர் மற்றும் இயக்குனர் டாக்டர்.எஸ்.ஆர் மீனாட்சி பிரியா ராகவன் மற்றும் வளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்து ஆண்டு விழாவில் கலை நிகழ்ச்சியில் பங்குக்கொண்டு திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ் கேடயங்கள் வழங்கினர்.
இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மேற்கத்திய நடனம்,பரத நாட்டியம்,ஓவியம்,வாய் பாட்டு,மியூசிக் கீபோர்டு உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வெளிபடுத்தினர்.இதில் பரத நாட்டிய ஆசிரியர் குரு டாக்டர்.புகழேந்தி பெருமாள் மற்றும் நித்திய கல்யாணி,எம்.விஜயா, குமாரி கீர்த்திகா ராமசந்திரன்,இசை குழுவினர்கள்,ஆர்.தாமரைசெல்வன்,சாய்மாஸ் டர்,டி.யோகநாதன் மற்றும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.