தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது..டிஜிபி சங்கர் ஜிவால் சொல்கிறார்!

Loading

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று டிஜிபி சங்கர் ஜிவால்தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-தமிழகத்தில் கொலை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது, அது உண்மைக்கு புறம்பானவை என்று தெளிவாக தெரிவரும். 2019 முதல் 2024 வரையில் ரவுடிகள் மோதல், பழிவாங்கும், சாதி மற்றும் சமூகவாத அடிப்படையிலான கொலைகள் கணிசமாக குறைந்துள்ளன.2025ம் ஆண்டின் முதல் காலாண்டிலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவான கொலைகள் பதிவாகியுள்ளன.

2023ல் போக்சோ வழக்குகளில் நேரடி புகாரளிப்பு 88 சதவீதமாக இருந்தது. அது 2024ல் 76ச தவீதமாக குறைந்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் விகிதம் நாட்டில் மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் மூலம், மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்திருப்பது தெளிவாகிறது.

அண்ணா பல்கலைக்கழக வழக்கில், 5 மாதங்களில் தீர்ப்பு கிடைத்தது,அரக்கோணம் வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. எந்த வழக்குகளிலும் அரசியல் தலையீடு என்பது முற்றிலும் இல்லை.

கடந்த 2 ஆண்டுகளாக 22 மாதங்களுக்கும் மேலாக எந்த காவல் மரணங்களும் பதிவாகவில்லை. இது ஒரு தேசிய சாதனையாகும். போதைப் பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தும் பணிகளில் காவல்துறையும், அரசும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

0Shares