காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு தலைவர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
திருப்பூர்மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசி பாளையம் அகில உலக காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவர் பூமிநாதன் நாடார் அவர்களின் 61வது பிறந்தநாள் விழா பொலி காளிபாளையம் அகம் மனநல மருத்துவமனையில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இனிப்பு வழங்கியும் அன்னதானம் வழங்கி விழா நடைபெற்றது. இதில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 61 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு கோவில் வழி பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு திருப்பூர் காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் என் ஆர் வேலாயுதம் .திருப்பூர் மாவட்ட தலைவர் மைக்கேல் .இளைஞர் அணி தலைவர் வசந்த் குமார் .திருப்பூர் நாடார் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் .செயலாளர் ஜெகன் தமிழ்நாடு வியாபாரி சங்க பேரவை ஆதிசெல்வன். அகில இந்திய பார்வர்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் இரா. அன்பு ரமேஷ் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.