முட்டைகளிலிருந்து மயோனை தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை.. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
ஏப்ரல் 8 முதல் ஒரு வருட காலத்திற்கு பச்சை முட்டைகளிலிருந்து மயோனை சேவை தயாரிப்பது, சேமிப்பது மற்றும் விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
பொது சுகாதார நலன் கருதி, பச்சை முட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைசே ஒரு “அதிக ஆபத்துள்ள உணவு” என்றும், உணவு விஷம் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் தமிழ்நாடு அரசு Government Gazettee No.161, dated 08.04.2025 -ன் மூலம் தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மயோனைசேவினை உற்பத்தி செய்தல், பதப்படுத்துதல், பேக்கேஜிங், சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம், உணவு சேவைகள், கேட்டரிங் சேகைவகள் மற்றும் விற்பனை செயதல் ஆகிய எந்த ஒரு நடவடிக்கையும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் பிரிவு 30(20)(ய) மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவின் கீழ் நமது மாநிலத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது.
மயோனைஸ் என்பது முட்டையின் மஞ்சள் கரு, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் ஷவர்மா போன்ற உணவுப் பொருட்களுடன் பரிமாறப்படும் பிற சுவையூட்டி களால் ஆன அரை- திட குழம்பு ஆகும். பச்சை முட்டைகளால் செய்யப்பட்ட மயோனைஸ் உணவுவிஷத்தின் அபாயத்தை கொண்டுள்ளதால் அதிக ஆபத்துள்ள உணவாகும். பல உணவு வணிகர்கள் மயோனைஸை தயாரிப்பதற்கு பச்சை முட்டையைப் பயன்படுத்துகிறார்கள் என்பது கவனத்திற்குவந்துள்ளது. மேலும் முறையற்ற சேமிப்பு பொதுசுகாதார ஆபத்தை உருவாக்கும் நுண்ணுயிர்களால் மாசுபடுவதற்கு வழி வகுக்கிறது. குறிப்பாக சால்மோனெல்லா பாக்டீரியா, சால்மோ னெல்லாடைபிமுரியம், சால்மோனெல்லா என்டெரிடிடிஸ், எஸ்கெரிச்சியாகோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைடழ்டோஜென்ஸ் ஆகிய நுண்ணுயிர்களால் என்று கூறப்படுகிறது.
எந்த ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலும் கிடைக்கக் கூடிய தகவல்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும், விளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அடையாளம் காணப்பட்டாலும், அறிவியல் நிச்சயமற்ற தன்மை தொடர்ந்தால், சுகாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான தற்காலிக இடர் மேலாண்மை நடவடிக்கைகளை சட்டத்தின் படி ஏற்றுக் கொள்ளலாம், மேலம் விரிவான இடர் மதிப்பீட்டடிற்கான கூடுதல் அறிவியல் தகவல்கள் நிலுவையில் உள்ளன. எனவே, பொது சுகதாரா நலனுக்காக உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம், மத்திய அரசு அல்லது மாநில அரசு தடை செய்த எந்த ஒரு உணவையும் எந்த ஒரு உணவு வணிக நிறுவனமும் தயாரித்தல், பதப்படுத்துதல், பேக்கேஜிங், சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம், உணவு சேவைகள், கேட்டரிங் சேகைவகள் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன்படி தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.