மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்!
வேலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, தலைமையில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் (பயிற்சி) ரவிக்குமார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சீனிவாசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.