வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்!

Loading

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்!

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா. மதிவாணன், தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு நாள், ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த குறைதீர்வு நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக மாவட்டகாவல்கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரில் அளித்து வருகின்றனர்.

மேலும் வாரத்தில் அனைத்து வேலை நாட்களிலும் பொதுமக்களின் மனுக்களை நேரில் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது. நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்வு நாளில் 40 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொண்டார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் (தலைமையகம்) மற்றும் காவல் துணை காண்காணிப்பாளர் சரவணன் (CWC) ஆகியோர் உடன் இருந்தனர்.

0Shares