உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்.. அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ப்பு!
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு காட்பாடி ஊராட்சியில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.
வேலூர் மாவட்டம் மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு காட்பாடி ஊராட்சி ஒன்றியம், கரசமங்கலம் ஊராட்சியில் நேற்று நடைப்பெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி வே.இரா.சுப்புலெட்சுமி. மாவட்ட வருவாய் அலவலர் திருமதி த. மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ செந்தில்குமரன், காட்பாடி ஒன்றியக் குழுத்தலைவர் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தணிக்காசலம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால், காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார், கரசமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்டாலின் தயாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.