தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் உச்சபட்சமான தண்டத்தொகை விதிப்புக்குஆ.ஹென்றி கடும் கண்டனம்
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் உச்சபட்சமான தண்டத்தொகை விதிப்புக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடும் கண்டனம் .
மேலும் அவர் தெரிவித்துள்ள கண்டன செய்தியில் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம் மாங்காடு நகராட்சி, மாங்காடு “அ” கிராமம், சர்வே எண்கள் 63/1B2A, 63/1D1A, 63/73 ஆகிய புல எண்களில் அடங்கிய 20.07 சென்ட் நிலத்தை சென்னையை சார்ந்த திருமதி. அக்ஷயா என்பவர் முறையாக சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் (CMDA) தொழில்நுட்ப அனுமதியும், மாங்காடு மாநகராட்சியில் இறுதி ஒப்புதலும் பெற்று, மனைப்பிரிவு அமைத்து அதற்கு வீனஸ் பார்க் என்று பெயரிட்டு, அந்தத் திட்டத்தை தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் (TNRERA) கடந்த 02.08.2024 பதிவு செய்து உத்தரவு பெறுவதற்கு (TNRERA/PLI/3338/2024) விண்ணப்பித்துள்ளார், மேலும் அதற்குண்டான முறையான கட்டணங்கள் அனைத்தையும் செலுத்தி ஒப்புகை சீட்டும் (TNPLI36812024) ஆக பெற்றுள்ளார்,
ஏழு மனைகள் கொண்ட மேற்கண்ட வீட்டுமனை பிரிவில், TNRERA வில் பதிவு செய்ய விண்ணப்பித்து, பதிவு கட்டணம் செலுத்தியும் உடனடியாக உத்தரவு வராததால், வாடிக்கையாளரின் அழுத்தத்தின் பேரில் 3 மனைகளை மட்டும் பில்டர் விற்பனை செய்துள்ளார்.
இதனால் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்
TNRERA வில் உத்தரவு பெறாமல் மேற்கண்ட மனைப்பிரிவில் மூன்று மனைகளை மாத்திரம் பதிவு செய்து கொடுத்த பில்டருக்கு 13.12.2024,ம் தேதி ரூபாய் ₹.303428.57 தண்டத் தொகையை விதித்து, அதனை 15 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த TNRERA வின் தான்தோன்றித்தனமான மக்கள் விரோத செயலையும், உச்சபட்ச தண்டதொகையை விதித்து, அதனை 15 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்கிற சர்வாதிகார உத்தரவினையும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி மிகவும் வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் மேற்கண்ட உச்சபட்ச தண்டத் தொகையை உடனடியாக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.