கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

Loading

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. 
கள்ளக்குறிச்சியில் ஏஎல்சி சமுதாய கூட வளாகத்தில் தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் கிறிஸ்துவ சபைகளின் பொதுக்கூட்டத்திற்தமிழ்நாடு கிறிஸ்துவ சபைகள் கூட்டமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தன் கார்த்திகேயன் எம் எல் ஏ அவர்களின் தலைமையில் ஏ எல் சி தேவாலய சமுதாய கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில்  தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன், மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சர்   செஞ்சி K.S.மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  தமிழ்நாடு கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பின் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி, சிறுபான்மையினர் நல வாரியத்திற்கான திராவிட மாடல் அரசின் சிறப்பு திட்டங்களை விளக்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் வடக்கு மாவட்ட கழக செயலாளருமான உதயசூரியன் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர், ஒன்றிய, நகர, பேரூர் பெரும் தலைவர்கள், துணைத்தலைவர்கள், மாவட்ட,ஒன்றிய, நகர, பேரூர் கழகச் நிர்வாகிகள், தேவாலய போதகர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
0Shares