மேற்கு மண்டல ஈரோடு மாவட்ட ஆலோசனை கூட்டம்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் மேற்கு மண்டல ஈரோடு மாவட்ட ஆலோசனை கூட்டம் சிந்து டெவலப்பர்ஸ் மேலாண்மை இயக்குனர் திரு P. சிந்து ராமமூர்த்தி அவர்களின் தலைமையில் ஈரோடு மாவட்டம் துலிப் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தேசியத் தலைவர் டாக்டர். ஆ.ஹென்றி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்கள் Lion நேரு நகர் நந்து அவர்கள் தேசிய அமைப்பு செயலாளர்,
(FAIRA)
Lion S.செந்தில்குமார் அவர்கள் தேசிய துணை தலைவர்,(FAIRA)
தலைமை நிலையச் செயலாளர் திரு.R.கார்த்திக், அவர்கள் (FAIRA)
செய்திதொடர்பாளர் திரு K.பொன் குமார் அவர்கள்(FAIRA)
உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இக்கூட்டத்தில் மனை வரன்முறை சட்டம் கால நீட்டிப்பு,
புதிய வீட்டுமனை பிரிவிற்கான அணுகு சாலை அளவை குறைக்க வேண்டும்.
கட்டடத் திட்ட அனுமதியில் அனுமதிக்கப்பட்ட தள பரப்பளவை அடையும் வகையில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகளை மாற்றி அமைக்க வேண்டும்.
மனைப் பிரிவு மற்றும் கட்டிட திட்ட அனுமதியை பெறுவதற்கு 28 க்கும் மேற்பட்ட துறைகளை அணுக வேண்டியுள்ளது. இதில் சுமார் 24 துறைகள் ஒற்றைச் சாளர முறையில் இணைக்கப்பட்டிருந்தாலும். லஞ்சம் லாவண்யம் கொடுக்காமல் கோப்புகள் நகர்வதில்லை. ஒற்றைச்சாளர முறையில் வீண் அலைச்சல், மன உளைச்சல், நேரம் காலம் வீண் விரயம் ஏதும் இன்றி மேற்கண்ட அனுமதிகளை விரைவாக வழங்க வேண்டும்.
பதிவுத்துறையில் இருக்கின்ற பல்வேறு பிரச்சனைகளை முத்தரப்பு குழு அமைத்து களைய வேண்டும், இதில் ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்களையும் இணைக்க வேண்டும்.
கிராம நத்தம் வகைபாடு உள்ள மனைகளை எந்தவித நிபந்தனையும் இன்றி, தங்கு தடை இன்றி பதிவு செய்ய வேண்டும்.
வழிகாட்டி மதிப்பில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும்.
மலைகள் பாதுகாப்பு அதிகார குழும (HACA) எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள நிலங்களை வகைப்படுத்தி, அதன் எல்லைகளை விரைவாக வரையறுத்து, அதற்கென தனியாக புதிய சட்ட திட்டங்களை வகுத்து, விரைவில் மனைப்பிரிவு மற்றும் கட்டிட திட்ட அனுமதி பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கரூர் சேலம் திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட பொறுப்பாளர்கள்,
நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.