முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் பெண் இனம் தழைத்திடும் வகையில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்திட சிறப்பாக செயலாற்றியமைக்காக சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான முதல் பரிசிற்கான விருதினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி வாழ்த்தினார்.இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு,சமூக நலத்துறை இயக்குநர் த. ரத்னா பேராசிரியர் பர்வீன் சுல்தானா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்