வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்
தூத்துக்குடி மாவட்டம் காமராஜ் கல்லூரி வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் காமராஜ் கல்லூரி இணைந்து நடத்திய கல்லூரி மாணவ/ மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் புத்தக கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில் பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் திருமதி.அ.ஸ்வர்ணலதா அவர்கள், உதவி இயக்குனர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் திருமதி.ம.பேச்சியம்மாள் அவர்கள் ஆகியோர் உள்ளனர்.