பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா

Loading

தென்காசி மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த முருகன் திருத்தலமான பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் பண்பொழி அருள்மிகு அறம் வளர்த்த நாயகி சமேத நகரீஸ்வரமுடையார் திருக்கோவிலில் வைத்து பத்து நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு கடந்த மாதம் 26ந் தேதி அன்னக்கொடி ஏற்றப்பட்டு தைப்பூசத் திருவிழா தொடங்கியது. பத்தாம் திருநாளான சனிக்கிழமையன்று  கரிசல் குடியிருப்பு தேவர் சமுதாயத்தினர் சார்பில்  காலை 10 மணியளவில் கரிசல் குடியிருப்பிலிருந்து பால்குட அழைப்பு நடைபெற்றது.  மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் பால்குடங்களை சுமந்து ரத வீதிகளை வலம் வந்து மதியம் 11.30 மணியளவில் கோவிலை வந்தடைந்தனர். மதியம் திருமலைக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்றது. திருக்கோவில் தலைமை அர்ச்சகர் திருமேனிநாத பட்டர் (எ) ரமேஷ் பட்டர் மற்றும் அர்ச்சகர் குழுவினர் திருமலைக்குமாரசாமிக்கு பூஜைகளை நடத்தினர். மண்டகப்படிதாரர்களான கரிசல் குடியிருப்பு தேவர் சமுதாயத்தினரும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் கரிசல் குடியிருப்பு தேவர் சமுதாயத்தின் சார்பில் மகா அன்னதானம் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்களும் மண்டகப்படிதாரர்களும் அன்னதானத்தில் கலந்து கொண்டனர். இரவு இன்னிசை நிகழ்ச்சியும் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி சப்பரத்தில் திருமலைக்குமாரசாமி திருவீதி உலா நடைபெறும் எனவும் கரிசல் குடியிருப்பு தேவர் சமுதாயத்தினர் தெரிவித்தனர்.

0Shares

Leave a Reply