5 ம் தேதி வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு அனைத்து வகை மதுக்கூடங்களும் மூட வேண்டும்

Loading

தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு  மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) விதிகள் 2003-ன்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் இயங்கும்  தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள்,கிளப்புகள்,ஹோட்டல்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும்  வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.மேலும் உத்தரவை மீறி மதுக்கூடங்கள் திறப்போர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரித்துள்ளார்.
0Shares

Leave a Reply