இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Loading

பண்ருட்டி, ஜன.12-  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நத்தம் ஊராட்சியில் ஏரி வாய்க்கால்  வழியாக நஞ்சை நிலம் சுமார் 750 ஏக்கர் நெல் சாகுபடி செய்யக்கூடிய வாய்க்கால் ஆக்கிரமிப்பில் உள்ளது.
நஞ்சை நிலத்திற்கு செல்லும் சாலை  ஆக்கிரமிப்பில் உள்ளதை அகற்றி விவசாயிகளின்  விளை பொருள்களான நெல், வைக்கோல் ஆகியவை வண்டிகளில் எடுத்து செல்ல தடையின்றி சாலை அமைத்துக் கொடு. நத்தம் ஊராட்சியில் டேங்கில்  தண்ணீர் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.இந்த கண்டன ஆர்ப்பாட்டம் பண்ருட்டி வடக்கு ஒன்றிய குழு தனபால் தலைமை தாங்கினார். ஏழுமலை, சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி, அங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் துரை, பாஸ்கர், பன்னீர்செல்வம், ஞானசேகர், சக்திவேல், குணசேகர், லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *