நெல்லூர்ப்பேட்டை நாட்டு நலப்பணி திட்டத்தின் ஏழு நாள் சிறப்பு முகாம்

Loading

கல்மடுகு கிராமத்தில் ஏழு நாள் சிறப்பு முகாம்.  தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்ககம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நெல்லூர்ப்பேட்டை நாட்டு நலப்பணி திட்டத்தின் ஏழு நாள் சிறப்பு முகாம் மேல்முட்டுகூர் ஊராட்சி கல்மடுகு கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது  அதனுடைய நிறைவு விழா 01/01/2023 மேல்முட்டுகூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் .சுந்தர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர்  எஸ் டீ . திருநாவுக்கரசு அனைவரையும் வரவேற்றார் இந்நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி வி  .அமலு விஜயன்  அவர்கள் வருகை புரிந்து மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் பரிசு பொருட்களையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜி எஸ்  .அரசு அவர்கள் முன்னிலை வகித்தார், இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் முன்னாள் லயன்ஸ் சங்கத் தலைவர் பொன்னம்பலம் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம் , லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள்,.  ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *