ஆட்டோ தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் .
மதுரை நகர் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறவும், பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை திரும்ப பெறவும், ஆட்டோ தொழிலாளர் மீது அநியாய அபராதம் விதிப்பதையும், ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காவல்துறை பறிப்பதாகவும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் லெனின், மாவட்டத் தலைவர் தெய்வராஜ், துணைத் தலைவர் அழகர்ராஜ், மாவட்ட தொழில் சங்க பொதுச் செயலாளர் கனகுவேல், பகுதி செயலாளர்கள் முருகன், முனீஸ்வரன், அழகுராஜ், செல்வம் உறுப்பினர்கள் பாண்டி, கலைச்செல்வி, சித்ரா, தெய்வநாயகி மற்றும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.