சேலம் தனியார் மகளிர் கலை கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு
சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் மகளிர் கலை கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் மீதான மனித உரிமை மீறலை தடுத்திடும் வகையில் கல்லூரி மாணவிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்த வாசகங்களுக்கு கைத்தட்டல் எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஸ்டாப் வயலன்ஸ் அகெய்ன்ஸ்ட் உமன் (stop violence against women) என பிரமாண்ட ரங்கோலி வரைந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பை குறிக்கும் வகையில் வடிவமைப்பை ஏற்படுத்தினர். இது குறித்து கல்லூரி மாணவிகள் கூறுகையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க பல்வேறு சட்டங்கள் இருந்த போதிலும் அவை சட்டமாக மட்டுமே உள்ளதாகவும் பெண்களின் பாதுகாப்பு தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை, பெண்களுக்கான உரிமைகளை பெண்களே கேட்டு பெரும் சூழல்தான் தற்போது உள்ளது. எனவே பெண்கள் அனைவரும் உரிமைக்காக குரல் எழுப்புங்கள் என தெரியப்படுத்தும் வகையிலேயே விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளோம் என தெரிவித்தனர்.