விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவேன்

Loading

விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவேன் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான த ஓ பன்னீர்செல்வம் இன்று கிரீன்வேஸ் சாலையில் இல்லத்தில் மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்ட அதிமுக   நிர்வாகிகளுக்கு வாழ்த்து கூறினார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த.ஓ.பன்னீர்செல்வம்  வெகு விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தனது தலைமையில் நடைபெறும் என்றும் மாவட்ட, மாநில வாரியாக நிர்வாகிகள் நியமனம் தற்போது நடைபெற்று வருவதாகவும் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்  பொறுப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும்  அது   முழுமை பெற்ற  பின்னர் அதிமுக  பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என்று தெரிவித்தார்,   ம இதன் பின்னர்  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்  செய்து தொண்டர்களை சந்திப்பேன் என்றும்  அவர்  கூறினார் ,அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனை சந்திப்பீர்களா என்று  செய்தியாளர்கள் எழுப்பிய  கேள்விக்கு,  வாய்ப்பு கிடைத்தால் விரைவில் அவரை சந்திப்பேன் என்று  ஓ.பன்னீர் செல்வம் விடையளித்தார், மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடி சந்தித்ததும் சென்னை கலைவாணர் அருகில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை  சந்தித்ததும் மரியாதை நிமித்தமானது தான்  என்றும்அரசியல் ரீதியானது அல்ல என்றும் அவர் கூறினார்  அமுமுக தலைவர் டிடிவி தினகரனை சந்திப்பீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில் வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என்று அவர் கூறினார். எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி அமைக்க போவதாக கூறியது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்,  இந்த செய்தியாளர் சந்திப்பின்போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் ஜே சி டி பிரபாகர் ஆகியோர் உடன் இருந்தனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *