பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பூமி பூஜையை தொடங்கி வைத்தார்
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மேம்பாலம் கட்டும் பணியானது மாடக்குளம் மற்றும் டி.வி.எஸ். நகர் பகுதியில் பாலப்பணிகள் முடிவடைந்த நிலையில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நிலுவையில் உள்ள பாலப் பணிகளுக்கான பூமி பூஜையில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். மதுரை மாநகராட்சி மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.